Tuesday, January 18, 2011

FireFox புதிய Tab செல்ல



பயர்பாக்ஸ் பிரவுசர் வழியாக இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் உள்ள லிங்க்கில் கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொண்டு கிளிக் செய்கிறோம். இதன் மூலம் புதிய டேப் ஒன்று திறக்கப்பட்டு அந்த லிங்க்கில் உள்ள தளம் திறக்கப்பட வேண்டும். ஆனால் அந்த டேப்பிற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்பட மாட்டீர்கள். நீங்கள் பழைய டேப் உள்ள தளத்திலேயே இருப்பீர்கள். புதிய லிங்க் அல்லது டேப் மூலமாக தளம் திறப்பதே, அந்த தளத்தை உடனே பார் க்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் ஏன் பழைய தளத்திலேயே பயர்பாக்ஸ் நம்மை வைத்துள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரின் இந்த வழக்கத்தினை, சிறிய செட்டிங்ஸ் மாற்றம் மூலம் மேற்கொள்ளலாம். Tools மெனு கிளிக் செய்து, அதில் Options தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Tabs என்பதைக் கிளிக் செய்திடவும்.

இங்கு கிடைக்கும் விருப்பத்தேர்வில், இறுதியாக When I open a link in a new tab, switch to it immediately என்று ஒரு வரி கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் விருப்பத்தின் பேரில், புதிய டேப் ஒன்றைத் திறக்கையில், அதில் உள்ள தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
Continue reading →

ரெஜிஸ்ட்ரியில் கை வைக்கலாமா ?



விண்டோஸ் சிஸ்டத்தில் ரெஜிஸ்ட்ரி என்பது விண்டோஸ் இயக்கத்தின் மூளை அல்லது முதுகெலும்பு என்று சொல்லலாம். இங்கு தான் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான குறியீட்டு வரிகள் உள்ளன. எனவே இவற்றில் ஏதேனும் ஒரு சிறிய மாறுதல்களை நாம் மேற்கொண்டாலும், அது இயக்கத்தில் மாறுதலை ஏற்படுத்தும். மாறுதல்கள் தவறாக ஏற்படுத்தப்பட்டால், அது கம்ப்யூட்டர் செயல்படுவதனையே முடக்கிவிடும். எனவே தான் கம்ப்யூட்டர் கட்டமைப்பு குறித்து அறியாமல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள், இதனை ஒரு பயமுறுத்தும் பேய் பங்களா என்று சொல்கிறார்கள்.

ஒரு வழிக்கு அது நல்லதுதான். இருப்பினும் சில நேயர்கள் கேட்டுக் கொண்ட சில கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கு காணலாம். ரெஜிஸ்ட்ரியைத் திறந்து அதன் குறியீடு வரிகளில் நாம் காண வேண்டிய அல்லது மாற்ற விரும்பும் வரியினைக் கண்டறிவத னைத்தான் நேவிகேட்டிங் தி ரெஜிஸ்ட்ரி (Navigating the registry) எனக் கூறுகின்றனர். இதை மட்டும் இங்கு காண்போம். ஆனால் ரெஜிஸ்ட்ரியில் சென்று அதன் வரிகளை மாற்றுவதாக இருந்தால், முன்பே இந்த இதழ்ப் பக்கங்களில் எழுதியபடி, ரெஜிஸ்ட்ரியை பேக் அப் எடுத்துப் பத்திரமான இடத்தில் பதிந்து வைத்துக் கொள்வது நல்லது.

ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு, கம்ப்யூட்டர் இயங்கா நிலை ஏற்பட்டால், பேக் அப் செய்த பைலை, அதன் இடத்தில் வைத்து இயக்கிக் கொள்ளலாம். முதலில் வாசகர் ஒருவர் குறிப்பிட்டுக் கேட்ட ரெஜிஸ்ட்ரி கீ என்றால் என்ன என்று பார்ப்போம். விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் உள்ள கீ என்பது ஒரு பைல் போல்டர் போல ஒன்றாகும். கீயினுள் உள்ள இன்னொரு கீ, சப் கீ (subkey) என அழைக்கப்படும். கீகள் அனைத்தும், ரெஜிஸ்ட்ரியின் இடது பக்க பிரிவில் மட்டுமே அமைக்கப்படும்.

முதலில் ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் (Registry Editor) திறக்க, விண்டோஸ் கீ+ஆர் (Win key + R) அழுத்தவும். அல்லது Run விண்டோ திறந்து அதில் regedit என டைப் செய்து என்டர் அழுத்தவும். அல்லது ஸ்டார்ட் பட்டனில் இடது கிளிக் செய்து, அதில் கிடைக்கும் சர்ச் பாக்ஸில் regedit என்று டைப் செய்து என்டர் அழுத்தலாம். நீங்கள் இதனை அழுத்துகையில் ரன் காட்டப்படவில்லை என்றால் என்ன செய்வது?

அதனை எப்படி ரெஜிஸ்ட்ரியில் சரி செய்திடலாம் என்பதனை இங்கு காணலாம். ரெஜிஸ்ட்ரியில் நேவிகேட் செய்வதனை ரெஜிஸ்ட்ரி பிரவுசிங் ( “browsing the registry”) எனவும் கூறலாம். இதனை மூடுவதும் திறப்பதும், + (plus symbol) அல்லது -(minus symbol) கீகளை அழுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் செல்ல விரும்பும் ரெஜிஸ்ட்ரி கீ இருக்குமிடம் அடையும் வரை இந்த இரண்டு கீகளையும் அழுத்திச் செல்லலாம். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், இந்த ப்ளஸ் மற்றும் மைனஸ் கீகள் இந்த செயல்பாட்டில் இல்லை. அதற்குப் பதிலாக, கீ அல்லது சப் கீயின் இடது மூலையில் ஒரு சின்ன முக்கோண அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்தால் கீ திறக்கப்படும்.

இந்த சிறிய முக்கோணம் வெண்மை நிறத்தில் இருந்து, வலது பக்கம் திரும்பி இருந்தால், அந்த கீ மூடப்பட்டுவிட்டது என்று பொருள். அதற்குப் பதிலாக, கருப்பாக இருந்து கீழ் நோக்கி இருந்தால், அதில் மேலும் துணை கீகள் இருக்கின்றன; அவற்றைத் திறக்கலாம் என்று பொருள். சரி, அடுத்து விண்டோஸ் திறக்கப் படுகையில், எந்த புரோகிராம்கள் திறக்கப்பட வேண்டும் என்று சொல்கிற ரெஜிஸ்ட்ரி இடத்திற்குச் செல்வோமா! இந்த இடத்திற்குச் செல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை இட வேண்டும். HKEY_CURRENT_ USER\Software\Microsoft \Windows\CurrentVersion\Run இந்த கட்டளையைக் கொடுத்தவுடன், நீங்கள் குறிப்பிட்ட ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் இருக்கும் இடத்திற்கு இட்டுச் செல்லப்படுவீர்கள்.

இப்போது இந்த விண்டோவில் வலது பக்கப் பிரிவினைப் பார்க்கவும். இதில் ஐந்து பதிவுகள் இருக்கும். இந்த பதிவுகளை “values” என அழைக்கிறார்கள். ஒரு ரெஜிஸ்ட்ரி வேல்யு, அதனைப் பல பார்மட்டுகளில் பதிவு செய்கிறது. இந்த வேல்யூக்களின் அடிப்படையில் விண்டோஸ் இயக்கம் தான் திறக்க வேண்டிய அப்ளிகேஷன்களைத் திறக்கும். இதில் தான் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால், இந்த வேல்யூக்களை மாற்ற வேண்டும். என்ன இவ்வளவு எளிதா, ரெஜிஸ்ட்ரி மாற்றுவது என்று கேட்காதீர்கள். இதில் சரியான, நமக்குத் தேவையான குறியீட்டினைக் கண்டு மாற்றுவதுதான் மிக முக்கியம்.இதில் தவறு ஏற்படவே கூடாது.
Share250
Continue reading →

Friday, January 14, 2011

கூகுள் நிறுவனம் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது


கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/ ebooks என்ற முகவரியில் இதனைக் காணலாம். இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு அனுப்பலாம்.



கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஐ-போன், ஐ-பாட் என எந்த டிஜிட்டல் ரீடிங் வசதி கொண்ட சாதனத்திலும் இதில் உள்ள நூல்களைப் படிக்கலாம். இதனால், ஒரு குறிப்பிட்ட நூலில் 34 பக்கங்களை ஐ-பாட் மூலம் படித்துவிட்டுப் பின் இன்னொரு நாளில், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் 35 ஆம் பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம். அல்லது கூகுள் தரும் வெப் ரீடர் அப்ளிகேஷன் மூலமாகவும் நூல்களைப் படிக்கலாம்.



நூல்களின் விலை 5.49 டாலர் முதல் 19.99 டாலர் வரை உள்ளது. நூல்களை அவற்றின் ஆசிரியர் கள் வாரியாகவும், தலைப்பு வாரியாகவும், சில முக்கிய சொற்கள் வாரியாகவும் தேடிக் கண்டறிந்து பயன்படுத்தலாம். நூல்கள் பிரசுரிக்கப்பட்ட ஆண்டு வாரியாகவும் பார்க்கலாம். இலவசமாய்க் கிடைக்கக் கூடிய நூல்களை மட்டும் தேடிப் பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் தேடுதல் தளம் இதிலும் தரப்பட்டு, நாம் சொற்களை டைப் செய்திடுகையிலேயே, நீங்கள் தேடும் நூல்கள் இதுவோ என்று அடுத்தடுத்து காட்டப்படுகின்றன.



நூல் பிரசுரித்தவர்கள், கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தங்கள் நூல்களை இதில் பட்டியலிட்டு விற்பனையை மேற்கொள்ளலாம். கூகுள் அனைத்து நூல் ஆசிரியர் களையும், பிரசுகர்த்தர்களையும் இந்த தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Continue reading →

தவளை பாதி.. நண்டு பாதி.. கலந்த கலவை கண்டுபிடிப்பு



கொச்சி: அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கத்தி மீன், தவளை நண்டு ஆகியவை 116 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரளாவை ஒட்டி வங்கக்கடலில் இவை இருப்பது தெரியவந்துள்ளது. ஆழ்கடலில் இருக்கும் மீன், நண்டு உள்ளிட்ட உயிரினங்கள் பற்றி மத்திய கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி கழகம் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது. ‘சாகர் சம்ப்டா’ என்ற ஆராய்ச்சிக் கப்பலின் உதவியுடன் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேரள மாநிலம் கொச்சி அருகே வங்கக்கடலில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அழிந்து விட்டதாக கருதப்படும் ஒருவகை வவ்வால் மீன், கத்தி மீன், தவளை நண்டு ஆகியவை தற்போதும் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உயிரினங்கள் ஆழ்கடலில் சுமார் 265 மீட்டர் முதல் 457 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடியவை. 116 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதாவது:

உலகின் பல பகுதிகளிலும் வவ்வால் மீன்களில் 9 வகைகள் இருக்கின்றன. இதில் 4 வகை இந்தியாவில் உள்ளவை. இவை கடல் பாசி, நுண்ணிய கடல்வாழ் புழுக்கள், மிகச்சிறிய மீன்களை உணவாக கொள்பவை. இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், செங்கடல் மற்றும் வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, தைவான், சீனாவை ஒட்டி அதிகம் காணப்படுகின்றன. மன்னார் வளைகுடாவில் அதிகம் இருப்பவை கத்தி மீன்.

வெள்ளி நிறத்தில் தட்டையாக இருக்கும். பெரும்பாலும் பவளப்பாறை, அதிக சேற்றுப்பகுதியில் உயிர் வாழும். மீன்களைப் போல் நீந்தாமல், செங்குத்தாக நீந்தும். இவற்றை சாப்பிட முடியாது. அழகுக்காக வளர்க்கப்படுபவை. கடைசியாக 1898 ல் அந்தமான் கடல் பகுதியில் பிடிக்கப்ட்டது.

இன்னொரு அரிய உயிரினம் தவளை நண்டு. தவளை மற்றும் நண்டின் கலப்புத் தோற்றம் கொண்டது. இதில் 11 வகைகள் உள்ளன. அவற்றில் 3 வகை இந்தியாவில் காணப்பட்டவை. தொடர்ந்து நடந்து வரும் ஆராய்ச்சியில் மேலும் பல உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படும் என்று


Thanks to tamilcnn
Continue reading →

பேஸ்புக்கில் பாதுகாப்பு வழிகள்!



சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது.

இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.

பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர்.

இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர்.

நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.


1. பேஸ்புக் பிளேசஸ் (Facebook Places):

இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது.

ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம்.

நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது.

எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம்.

யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும்.

இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.


2. தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த:

உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர். முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம்.

எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lock என்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.

உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும்.

நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ள Customize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கு அடிக்கடி என்னை உன் நண்பனாகச் சேர்த்துக் கொள் என்றெல்லாம் மெயில் செய்தி வரும். தெரியாதவர் என்றால், உடனே அதனை அலட்சியப் படுத்திவிடுங்கள். இது போன்ற வேண்டுகோளுக்கு யெஸ் சொல்லித்தான் பலர் மாட்டிக் கொள்கிறார்கள்.


3. அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா?

பேஸ்புக் தளத்தில், மெட்ரோபோலிஸ் மற்றும் மாபியா வார்ஸ் போன்ற விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும்.

இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும். இது போன்ற செய்திகள் உங்களுக்குத் தொல்லை தருவதுடன், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்லும். மேலும், நீங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விளையாடுவது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமா என்று யோசிக்கவும்.

இதில் நீங்கள் மட்டுமே இயங்க ஒரு செட்டிங்க்ஸ் அமைத்துவிடலாம். உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கில் Privacy Settings செல்லவும். இதன் கீழ் இடது பக்கத்தில் Applications and websites என்று ஒரு பிரிவு இருக்கும்.

இங்கு Edit Your Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும்.

இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.


4. அப்ளிகேஷன்களுக்குத் தடா:

பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது.

பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும்.

Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applications என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.


5. அணுகுவதற்குத் தடை:

உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.


6.இறுதி நடவடிக்கை:

பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள்.

இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம்.

இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும்.


Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும்.

திரும்பிப் பார்க்காமலேயே. பேஸ்புக் தளத்தில் இருப்பது ஒரு நல்ல இனிமையான மற்றும் வேடிக்கையான அனுபவம் தான். ஆனால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது.

அதற்கான வழிகளைத் தான் மேலே பார்த்தீர்கள். அவற்றை மேற்கொள்வது உங்கள் முடிவைப் பொறுத்தே உள்ளது.
Share 0
Continue reading →


 
Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog